இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது பெரிய தவறா?

தண்ணீர் நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கின்றது. தாகம் ஏற்பட்டால் தண்ணீர் பருக வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சில அன்றாட வாழ்க்கை விஷயங்களை நாம் செய்வதற்கு முன்பு அல்லது பின்பு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

அப்படி செய்வதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனவே தண்ணீர் எப்போது எல்லாம் கட்டாயம் குடிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் காலையில் தண்ணீர் குடிப்பது கட்டாயம் தேவை என்று சொல்லப்படுகிறது.

மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது அவசியம் ,ஏனென்றால் இது உணவு குழாய் பாதையில் தேங்கியுள்ள தேவையற்றதை அகற்றுகிறது. இதனால் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கல் ஏற்படாது.

குளிப்பதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் ரத்தம் அழுத்தம் குறையும். இதனால் திடீரென ஏற்படும் வலிப்பு போன்ற அபாயங்கள் வராது.

உடற்பயிற்சி செய்யாத நாட்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

உடற்பயிற்சி செய்த பிறகோ அல்லது வியர்வை வரும்படி நாம் செய்யும் செயல்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

ஆனால் பலர் தற்போது தண்ணீர் தாகம் எடுத்துக் கூட வேலையின் காரணமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான செயல் எனவே ஒரு நாளுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

மேலும் மேற்கண்ட விஷயங்களை கடைபிடித்தால் கூடுதலான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...