ஒரே நாள், ஒரே நேரத்தில் ஐபிஎல் போட்டியின் இரண்டு ஆட்டங்கள்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடரின் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பது கடும் போட்டி உள்ளதால் முதல் போட்டியின் முடிவை தெரிந்து கொண்டு கடைசி போட்டியில் விளையாடும் அணிகள் ரன் ரேடி அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் என்பதால், கடைசி இரண்டு போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஒரே நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு ஐபிஎல் அணி வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.