News
“யூனிபார்மை கழட்டிவிடுவேன்”; திமிரா பேசிய வழக்கறிஞர் மீது வழக்கு!!
தற்போது ஊரடங்கு காலகட்டம் என்பதால் பல பகுதிகளில் போலீசார் மிகவும் கடுமையான முறையில் கட்டுப்பாடுகளை மிகவும் உபயோகிக்கின்றனர். மேலும் இதனால் தினம் தோறும் பல்வேறு விதமான வழக்கு பதிவாகின்றன. இந்நிலையில் அப்போது இருசக்கர வாகனங்களும் மகிழுந்து கொள்ளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக சென்னையில் தினந்தோறும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் பணியில் இருந்த போலீசார் அவரை தரக்குறைவாக பேசி இருந்தால் பெண் வழக்கறிஞர். மேலும் அவரை மிரட்டும் தொனியில் அவர் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதுவும் அந்த போலீசாரை வாடா போடா என்று மரியாதை என்று பேசியது மட்டுமின்றி நான் யார் தெரியுமா உனது யூனிபார்மை கழற்றி விடுவேன் என மிரட்டல் விடுத்து இருந்தார் அந்தப் பெண்மணி.
மேலும் அவர் வழக்கறிஞர் என்றும் குறிப்பிட்டு சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த காவலரை மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாரிடம் தவறாக பேசி தவறு செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் புகார் கொடுத்துள்ளார் மேலும் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை சேத்துப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் போலீசாரை ஒருமையிலும் மரியாதைக் குறைவாகப் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
