‘ஈபிஎஸ், ஓபிஎஸை இணைக்கவும், கழகத்தில் இணையவும் காத்திருக்கிறேன்’- முன்னாள் எம்.எல்.ஏ அதிரடி….

இமானுவேல் சேகரன் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ச இமானுவேல் சேகரனின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை இமானுவேல் சேகரனின் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள் இதனை தெடர்ந்து இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக மாநில இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சாந்துர் ராமசாந்திரன் பெரிகருப்பன், தங்கம் தென்னரசு, கயல்விழி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்..

சட்டமன்றத்தில் இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம் திமுக ஆட்சியில் மின் கட்டணம் பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகளை உயர்த்தி விட்டது தான் சாதனை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மதிப்பதில்லை பின்பு எப்படி தமிழக மக்களை மதிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி.

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்.பி தர்மர் மற்றும் முன்னாள் எம்பி பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் தரப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி அதிமுக எழுச்சியுடன் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இபிஎஸ் -ஓபிஎஸ் இணைந்திருந்த போது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள் மீண்டும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும் கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன் அதிமுகவினரை இணைக்கவும் தயார் அதில் இணையவும் காத்திருக்கிறேன் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கிறது

அதிமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு அவதாரம் அவரின் பக்தனாக தொடர்கிறேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜா, மேலும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் முழுவதும் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி தலைமையில் ஒரு ஐஜி, 3 மூன்று டிஐஜி, 34 காவல் கண்காணிப்பாளர்கள், 24 ஏடிஎஸ்பி, 210 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள், 300 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 550 சிறப்பு காவல் படை பிரிவினர் உள்ளிட்ட 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார் பரமக்குடி பேருந்து நிலையம், ஐந்து முனை, நினைவிடம் என முக்கிய பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய்த்துறை வட்டாட்சியர், துணை வட்டாச்சியர் அளவிலான 65 குழுவினர் பாதுகாப்பை மேற்பார்வையிடுவது, அனுமதி பெற்று வருவோர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment