Entertainment
கவின்- லாஸ்லியாவைப் பிரிக்க போட்டியாளர்கள் எடுத்த முடிவு!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார்.
இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. சேரன் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருப்பதால் அவரை நாமினேட் செய்யமுடியாது என பிக் பாஸ் அறிவித்தார்.

இதனால் யாரை நாமினேட் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கவின், முகின், வனிதா, ஷெரீன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் கவின் 5 வாக்குகளும், வனிதா, ஷெரின், முகென் ஆகியோர் 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். பிக் பாஸ் தொடங்கி 75 நாட்கள் ஆகியுள்ளநிலையில், ஷெரின் நாமினேட் ஆகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
கவினும் லோஸ்லியாவும் பேசிக் கொண்டிருக்கையில், தன்னால்தான் கவின் நாமினேட் ஆனதாகக் கூறுகிறார். கவின் பரவாயில்லை நான் போன பின் இருந்துவிட்டு டைட்டிலை ஜெயித்துவிட்டு வருமாறு கூறுகிறார்.
அதன்பின்னர் கவின், என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்ற நினைப்பவர்கள் நிச்சயம் என்னை வெளியேற்றவே நினைப்பர் என்று கூறியதுடன், நானே என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றவே நினைக்கிறேன் என்று காதல் பொங்க கூறினார்.
யாரு என்ன வேணும்னாலும் சொல்லிகோங்க நாங்க இப்படித்தான் என்பதுபோல இருவரும் எப்போதும்போல பேசிக் கொண்டிருந்தனர்.
