தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களிடையே உரையாற்றினார்.
மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர், “தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் இந்தி மொழியை திணிக்க முடியாது. இந்தி மட்டுமல்ல.. வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது” என கூறினார் .
பெங்களூரு-வேளாங்கண்ணிக்கு இடையே கூடுதல் ரயில் சேவை
மேலும் “இந்தியை விட தமிழ் மொழி மிகவும் தொன்மையானது, அங்கு சமஸ்கிருதம் மட்டுமே தமிழைப் போல தொன்மையானது. திருக்குறள் மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் வழங்கும் புத்தகம். ஒவ்வொருவரும் திருக்குறளை ஆழமாக படிக்க வேண்டும்,” என்று ஆளுநர் கூறினார்.