உயர்கல்வி மேம்பாடு: ஆக.30-ல் துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

உயர் கல்வியின் மேம்பாடு தொடர்பாக வருகின்ற ஆகஸ்ட் 30-ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகின்ற ஆகஸ்ட் 30-ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 17-ம் தேதி நடைப்பெறுவதாக இருந்த இந்த கூட்டமானது முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு  இருந்தது. பிறகு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் நான் முதல்வன் திட்டத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல் ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து துணைவேந்தர்கள் உடன் ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment