கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 22 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர். கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் பெரம்பலூர், சேலம், திருச்சி. நாமக்கல், தருமபுரி, கோவை, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.