Tamil Nadu
இன்று முதல் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று முதல் 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
செப்டம்பர் 3ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், செப்டம்பர் 4ஆம் தேதி தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
