தமிழ் நாட்டின் கிழக்கு பகுதியில் வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று கொண்டு வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலும் சுழல் காற்று வீச படலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று வங்கக் கடலின் தென், மன்னார் வளைகுடா, குமரி கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்க கடலின் தெற்கு, மத்திய மேற்கு, தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, குமரி கடலில் பலத்த சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மார்ச் 4 ஆம் தேதி வங்கக் கடலின் மத்திய மேற்கு, தென்மேற்கு வட தமிழகம், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் மத்திய மேற்கு, தென்மேற்கு வட தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.