தஞ்சையில் 1000 குழந்தைகளுக்கு உதடு அன்னப்பிளவு ஏற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை அளித்த தஞ்சை மீனாட்சி மருத்துவமனை நிர்வாகத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களிலும், மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளிலும் சிறிய அளவிலான 708 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன அடுத்தமாதம் புதிய 708 மருத்துவமனைகளும் திறக்கப்படும் என்றவர்.
கொரோனா விற்கு பிறகு 35 வயது 40 வயது உடையவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திட நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரமாவது ஓடவும், நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றவர்.
புதிய வகை கொரோனாவை தடுத்திட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் கண்காணிக்கப்படுகிறார்கள். அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்கிற விதி இன்னும் இருக்கிறது மாஸ்க் அணிவது நல்லது என்றவர். இரத்தத்தை எடுத்து காதலை தெரிவிக்க ஓவியம் வரைவது எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.