இன்று பஞ்சமி- வராஹி வழிபாடு கோவில்கள் பற்றிய முழு விளக்கம்

068727a79985e3a9c442eea671cfcd41

நீங்கள் இன்று வரையிலும் மாந்திரீக பாதிப்பினால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா?

உங்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் அல்லது மண்டை ஓடு அல்லது இழிவான பொருட்கள் வருகிறதா?

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலம் தவிர மற்ற காலங்களிலும் சிறிது கூட வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா?

நீங்கள் மாந்திரீக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தான் உண்டு,தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தும் கூட உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தொழில்போட்டியாளர்கள் மறைமுகமாக உங்கள் வேலை/தொழிலில் பாதிப்பை உண்டாக்கி கொண்டே இருக்கிறார்கள் என்று நம்புகிரீர்களா?

இதில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ விரும்பும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்!!!

இந்த மாத தேய்பிறை பஞ்சமி 28.7.2021 புதன் கிழமை இரவு உள்ளது. இந்த நாளில் இருந்து தினமும் வாராகி மாலை இரவில் தூங்குவதற்கு முன்பாக மூன்று முறை அல்லது ஐந்து முறை ஜெபம் செய்து வாருங்கள்!

அடுத்த 90 நாட்கள் வரை தினமும் இவ்வாறு ஜெபம் செய்து வாருங்கள்!(இந்த நாட்கள் முழுவதும் நீங்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது; மது அருந்தக் கூடாது;இந்த மாதிரி வாராகி ஜெபம் செய்ய ஆரம்பித்து உள்ளேன் என்று எல்லோரிடமும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்)

நம் ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான கர்ம வினைகள உண்டு.பராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாமய கர்மா!

இந்த மூன்று கர்ம விணைகளையும் ஒரே பிறவியில் நீக்க யாராலும் முடியாது.

அப்படி ஒரே ஒரு பிறவியில் நீக்க முயன்றால் பின்வரும் ஆன்மீக முயற்சிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தொடர்ந்து செய்து வர வேண்டும்.

1.ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாமல் செல்வதால் அண்ணாமலையார் அப்பாவின் கருணைக்கு பாத்திரம் ஆகி,இந்த மூன்று கர்மாக்கள் முழுமையாக நீங்குவதற்கு உரிய வழிமுறை கிடைக்கும்.

2.தினமும் இரவில் ஐந்து முறை வாராகி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை இவ்வாறு அன்னை வராகியை சரன் அடைந்து அவளை பெற்ற அன்னையாக எண்ணத் துவங்கினால் அவளது கருணையால் மூன்று கர்ம வினைகளும் ஒரே பிறவியில் அழிந்து விட வாய்ப்பு கிடைக்கும்.தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹா வாராகி! என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

பின்வரும் ஊர்களில்

(தமிழ்நாடு முழுவதும்) உள்ள வராகி அம்மன் ஆலயங்கள் உள்ளன.

இந்த ஊர்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வசித்து வந்தால் தினமும் அல்லது புதன் கிழமை தோறும் அல்லது தேய்பிறை பஞ்சமி நாட்கள் வரும் போது வாராகி அம்மன் சன்னதிக்கு அருகில் அமர்ந்து கொண்டு வாராகி மாலை ஜெபம் செய்து வரலாம்.

காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராஹி தேவி அருள்பாலிக்கிறாள்.வராஹி அம்மனின் எதிரில் ”சந்தானஸ்தம்பம்” உள்ளது.

இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது தெய்வ வாக்கு.

பள்ளூர் அரசாலைஅம்மன் என்னும் வராஹி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள்.

காஞ்சிபுரம் நகரில் இருந்து (அரக்கோணம் செல்லும் சாலையில்) 15 கிலோமீட்டர்

தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன்[வராஹி அம்மன்]திருக்கோயில் உள்ளது.

இங்கு வராஹி அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் அருள்கிறாள்.மிகவும்

புராதனமான திருக்கோயில் இதுவாகும்.

பெரும்பாலான அம்மன் கோயில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்.அபூர்வமாக சில அம்மன் கோயில்கள் மற்றும் தெற்கு நோக்கி அமைக்கப் பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் பரிகார கோயில்கள் ஆகும். இங்குசெய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.

பள்ளூரில் வராஹி அம்மனை செவ்வாய் ,பஞ்சமி,அஷ்டமி ,அமாவாசை பௌர்ணமி நாட்களில் வந்து அபிசேகம் செய்வித்து,

வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேற்றி வருகின்றாள்.

பில்லி,

செய்வினை,

மன நோய்,

மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள்,

தீராத எதிரி தொல்லை,

முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை ,

வழக்குகள்,

காரிய தடைகள் அண்டாது என்கிறார்கள்.

பள்ளூரில் வராஹி அம்மன் திருக்கோயில் அருகில் மிகவும் பழமையான பரசுராமஈஸ்வரர் திருக்கோயில்,ஸ்ரீகுகையீஸ்வரர் திருக்கோயில்,சப்த கன்னிகைகள் திருக்கோயில் உள்ளது.’

இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு உரிய

தீர்த்தமாகும்.

நம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயில் ”தீர்த்தவாரி”இந்த ”சீதப் புனல்” என்னும் சீதளா தீர்த்தத்தில்தான் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்ல இந்த உத்தரகோசமங்கை மகா வராஹி அம்மன் [ஆதி வராஹி]சுயமபுவாக தோன்றி

ஆதிகாலத்தில் இருந்தே அருள்பாலித்துவருகிறாள் என்பது

குறிப்பிடத்தக்கது.இந்த சுயம்பு வராஹி அம்மன் தோன்றி சுமார் 25,000 ஆண்டுகள் ஆகின்றன!!!

வராஹி அம்மன் அபிஷேகத்துக்கும் சீதளா தீர்த்த நீர் பயன்படுவது அதன் மகிமையை காட்டுகிறது.இதனைத்தான் மாணிக்கவாசகர் தமது

திருவெம்பாவையில் பதிவு செய்து உள்ளார்.இந்த சுயம்பு வராஹி அம்மனை ஆதி வராஹி என்றே போற்றுகிறார்கள்.மங்க ள மாகாளி அம்மன் என்பதும் இவளை அழைக்கும் திருநாமத்தில் ஒன்று.

இதுபோல வேலூர்

அருகில் உள்ள கீழ்மின்னல் இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயில் அருகமைந்த வராஹி அம்மன் திருக்கோயிலும் பழமையானது என்கிறார்கள்.

இந்த இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயிலில் தான் ”வாழும் மகான் ;வாய் திறவா மகான்”முருகன் அருளால் பக்தர்களின் குறைகளை களைந்துவரும் ”தவத்திரு பாலமுருகன் அடிமை ஸ்வாமிகள்”அருளாசி வழங்கிவருகிறார் என்பது

குறிப்பிடத்தக்கது..இத்தல வராஹி அம்மன் பாலமுருகனடிமை ஸ்வாமிகளின் வழிபடு தெய்வம் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனுறை அரசேஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது.இத்தல தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராஹி அம்மன்

அருள்பாலிப்பது சிறப்பு.

சிவகங்கை அருகில் உள்ள சிங்கம்புணரி முத்தவடுகநாத சித்தர் வராஹி அம்மனிடம் சித்தி பெற்றவர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவடுகநாதர் வராஹி அம்மனைப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார்.

அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தார்.எந்தவித விஷக்கடியாக இருந்தாலும் இவர் மந்தரித்துத் திருநீறு இட்டால் விஷம் இறங்கிவிடுமாம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவரிடம் திருநீறு பெற்றுக் குழந்தை பாக்கியம் அடைந்ததாக கூறுகிறார்கள்.

முத்துவடுகநாத

சித்தர் தமது சமாதி நாளை முன்னதாகவே அன்பர்களிடம் சொல்லி தம் சமாதியும் தோண்டச் செய்து,சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய தமது உருவக் கற்சிலை ஒன்றைச் செய்வித்து,அதற்கு உயிரூட்டி உருவேற்றி அன்பர்களிடம்

கொடுத்தாராம்.அவர் கூறிய நாளில் பின்னாளில் சமாதி ஆன உடன் அவருக்கு சமாதி செய்து,அதன் மேல்புறத்தில் சித்தர் உயிரூட்டி உருவேற்றி கொடுத்த அவரது சிலை பிரதிஷட்டை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு இடப்புறம் அவர் பூஜித்து வந்த வராஹி அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்து உள்ளனர்.

சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்து காத்து நிற்கிறார்.இவரை ”வராஹி சித்தர்”என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள். பல வருடங்களாக தீராத பில்லி, ஏவல், சூனியம், ஜின், மாந்திரீக பிரச்சனைகள் தீர பௌர்ணமி அன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அடுத்துவரும் கொட்டாரம் எனும் ஊரிலிருந்து தெற்கில் 2 கிமீ தூரத்தில் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருத்தலத்தில் முத்தாரம்மனை அனுதினமும் சப்தகன்னியர்கள் வழிபடுகிறார்கள்.சக்தியின் அம்சமான பிராம்மி,மகேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வராகி,இந்திராணி,சாமுண்டி ஆகிய சப்தகன்னியரும் மது கைடப வதம்,சும்ப நிசும்ப வதம்,சண்ட முண்டர் வதம்,மகிஷாசூர வதம் முதலியவற்றில் அசுரர்களை ஒழிக்க அம்பாளுக்கு துணைநின்றவர்கள் ஆவர்.

இதனால்தான் இத்தலத்தில் பஞ்சமி நாட்களிலும்,நவராத்திரி ஒன்பது நாட்களிலும்,இராகுகால வேளைகளிலும் வழிபடுவது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

காசியில் வராஹி அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.தினமும் அதிகாலை 4.30 முதல் சூரிய உதயம் வரை மட்டுமே திறந்து இருக்கும்.இந்த அன்னைக்கு பாதாள வாராகி என்று பெயர்.காசி விஸ்வநாதர் கோயில் பகுதிக்கு செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள தெரு வழியாக சென்றால் கங்கை கரையோரம் ஒரு சிறு தெருவுக்கு உள்ளே அமைந்துள்ளது.

தஞ்சாவூர்

பெரிய கோயிலிலும் ,செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் ஆலயத்திலும்,

செங்கல்பட்டு அருகில் உள்ள

வாலாஜாபாத் ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருமலை சேரி என்ற கிராமத்தில் பழமையான சிவாலயத்தில் முன் பக்கத்தில் அன்னை மஹா வாராகி சன்னதி உள்ளது.இங்கே தேரையர் சித்தரின் ஜீவ சமாதி ஆகி உள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனிச்சன்னதியில் தனிக்கோயில்கள் உள்ளது சிறப்பு.

கடலூர் அருகில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் தலத்தில் செல்லியம்மன் ஆலயம் உள்ளது.இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகில் (மயிலா டுதுறை யிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவிலும்) உள்ள வழுவூர் இளமுலை நாயகி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் ஈசனை வராஹி அம்மன் அனுதினமும் வழிபடுகிறாள் என்கிறார்கள்.இங்கே தான் அன்னை மஹா வாராகி தெய்வீக வல்லமையை அடைந்தாள்!!!

பண்ருட்டியில் உள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இருந்து இராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் டி.குண்ணத்தூர் அருகில் உள்ள மகாசக்தி மாரியம்மன் திருக்கோயிலிலும் மஹாவராஹி அம்மன் எழுந்தருளி

அருள்பாலிக்கிறாள்.

சென்னை அருகில் உள்ள சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா திருக்கோயிலிலும் வராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்கிறாள்.

காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் உள்ள பிரத்யங்கரா

ஆலயத்திலும் தனி சன்னதியில் அருள் சக்திஉடன் அன்னை வராஹி அருள்பாலிக்கிறாள்.

திருச்சி அருகில் திருநெடுங்களம் மங்களாம்பிகை உடனுறை

நித்திய சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வராஹி அம்மன் வரம் பற்பல அளித்து தம்மை அடியவர்களை காத்தருளுபவள்.

நெல்லை கல்லிடைக்குறிச்சி திருவாடுதுறை கிளை மடம் அருகே உள்ள தளச்சேரி என்னும் இடத்தில் உள்ள மானேந்தியப்பர் திருக்கோயிலில் அருளும் வராஹி அம்மனும் தனித்துவம் மிக்கவள்.(மந்திர வராஹி)

விழுப்புரம் சாலமேடு எஸ்.ஆர்.நகரில் அஷ்டவராகி கோயில் உள்ளது.

இங்கு மகா வராகி, ஆதி

வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி,மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி முதலிய அஷ்ட வராகிகளும் உள்ளது சிறப்பு.

திருச்சி உறையூர் மங்கள் நகரில் வராஹி அம்மனுக்கு உள்ள தனி

ஆலயமும் சிறப்புகள் வாய்ந்தது.

தூத்துக்குடி எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் [ நரிப்பட்டி ]என்ற தலத்திலும் வாரஹி அம்மன் ஆலயம் உள்ளது.’

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை.ஸ்ரீ சக்ர மகாமேருவில்

வீற்றிருந்துஉலகை பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக பிராமி,கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி,வராஹி

எனும் சப்தமாதாக்கள் உள்ளனர்.

இவர்களில் வராஹி அம்மன் சிறந்த வரப்பிரசாதி.சப்த மாதர்கள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள்.

மனிதஉடலும், பன்றி முகமும் கொண்டவள்.கோபத்தின் உச்சம் தொடுபவள்.ஆனால் அன்பிலே,ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகிஅம்மன்.இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும்.சப்த மாதர்களில் வராஹியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

பைரவரின் சக்தியாக இருப்பதால்,வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள்

உருவாகும்.இதனால்தான் ”வராஹி காரனிடம் வாதாடாதே”என்பார்கள்.வாக் சக்தி அருளும் அதிதேவதை வராஹி அம்மன்.

பகை,வறுமை,பிணி,தடைகள் அகலும்.பில்லி,சூன்யம்,மாந்திரீகம் விலகி ஓடும்.எதிரிகள்

,பகைவர்கள் ,தீயோர் விலகிடுவர்.நம் மனதுக்கு பிடித்தவர்

வசியமாவர்.

பஞ்சமி நாட்களில் கூடியவரை இரவு உணவை தவிர்க்கவும்.தவிர்க்க இயலாதவர்கள் பால்,பழம் வராஹி

பூஜைக்கு பின்பு சுவைத்திடலாம்.இந்த 8 பஞ்சமி நாட்கள் [வளர்பிறை,தேய்பிறை பஞ்சமி ]தொடர் வழிபாட்டின்போது கண்டிப்பாக அசைவ உணவை தவிர்த்திட வேண்டும்.மது,புகை விலக்கிவைப்பது

சிறப்பு.

வராஹி அம்மனை பஞ்சமி நாட்களில் மட்டுமல்ல இந்த தொடர் பஞ்சமி நாட்கள் வழிபாட்டின் போதும்,தினமும் இரவில் தீபம் ஏற்றி வீடுகளில் அல்லது

அருகில் உள்ள அம்பிகை சன்னதியில் ”அபிராமி அந்தாதி”, ”லலிதா நவரத்தின மாலை”மற்றும் ”வராஹி மாலை”கண்டிப்பாக பாராயணம் செய்து வருதல் உடனடி

நற்பலன்களை அள்ளித்தரும்.

உங்கள் பிரச்சனைகளின் அதிதீவிரத்தை வாராஹியிடம் முறையிட்டால்,உங்கள் பக்தியின் தீவிரத்தை அறிந்து அன்னை வராஹி உங்கள்

பிரச்சனைக்கு கனவில் வந்து அல்லது உங்கள் முன் தோன்றி கூட உங்கள் பிரச்சனைகளின் தன்மையை உணர்த்தி ,அது உடனே நிவர்த்தியாக வழிவகை

செய்திடுவாள்.

கருப்பு உளுந்து கொண்டு சாதம் செய்து பஞ்சமி நாட்களின் இரவில் வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து முறைப்படி வழிபட வராஹி

அன்னையிடம் நாம் வைக்கும் நலம் வாய்ந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேறி வரும் என்கிறார்கள்.

வராஹி வழிபாட்டின் தொடக்கத்திலும்,நிறைவிலும்

கண்டிப்பாக ”பைரவர் பூஜை”செய்திடல் சிறப்பு.[பைரவரை நினைத்து வழிபடுதல் அல்லது பைரவர் சந்நதியில் தீபம் ஏற்றுதல் அல்லது பைரவர் பாடல்கள் பாராயணம் செய்து வருதல் சிறப்பு].

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனும் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வராகிஅம்மன் திருக்கோலமே பூணுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை பாலகுஜாம்பாள் உடனுறை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சன்னதி பின்புறம் அன்னை வராகி உடன் சப்த கன்னியர் உருவங்கள் உள்ளன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் உண்ணாமுலையம்மன் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு முன் படி ஏறும் பகுதியில் வராஹி அம்மன் காட்சி தருகிறாள்;இவளை வணங்கியப் பின்னரே மூலவர் ஆலந்துறையாரை வணங்க வேண்டும்;

திரும்பும் போது கவுமாரியை வணங்க வேண்டும்;இவ்வாலயத்தில் சப்தமாதர்களின் ஆலயம் இருக்கிறது.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் சப்தகன்னியரில் வராஹி அம்மன் சிறப்பாக போற்றப்படுகிறாள்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் அருகில் உள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் சந்நதி அருகில் வீரபத்திரர் உடன் சப்தகன்னிகளும் உள்ளனர்.இங்கும் வராஹி அம்மன் வழிபாடு செய்வது பெரும்சிறப்பு.

இங்கு சப்தகன்னிகள் வழிபட்ட பின்பு கண்டிப்பாக சுசீந்திரம் தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் வழிபாடு செய்திடல் சிறப்பாம்.

சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்து இருப்பது செங்கண்மால் திருத்தலம்.இங்கு பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரர் திருகோயில் அமைந்து உள்ளது.இக் கோவிலுக்கு வடக்கில் ”சுவேத வராக தீர்த்தம்” உள்ளதாம்.இதில் நீராடி,ஆலயத்தில் பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரரை வழிபடுவது வராஹி அம்மனை மகிழ்விக்குமாம்.

சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்தில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது.

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெற்கு மாடவீதியில் அமைந்து உள்ள காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளிஈஸ்வரர் திருக்கோயில் உட்ப்ரகாரத்தில் வராஹி அம்மனுக்கு தனி சந்நதி உள்ளது.

சென்னை மைலாப்பூர் கோலவிழி பத்திரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில்களிலும் சபதகன்னியர் சன்னதிகளில் ஒருவராக வராஹி அம்மன் எழுந்தருளியுள்ளாள்.

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை.எனவே பஞ்சமி நாட்களில் அன்னைக்கு பச்சை ஆடை உடுத்துவதும்,பச்சை மரிக்கொழுந்து சாற்றுவதும் சிறப்பு.

சிகப்பு நிற ஆடையும்,மலர்களும் கூட மிகவும் உகந்தவையே.வராஹி அம்மன் பூஜை செய்பவர்கள் பச்சை ஆடை,சிகப்பு ஆடை

உடுத்திக் கொள்வது ரெட்டிப்பு பலன்களை அள்ளித்தரும்.

…..”வராகி அம்மன்

மாலை”யும்,”அபிராமி அந்தாதி”யும் பாராயணம் செய்து அந்த பின்னிரவில்

வராகி அம்மனை வழிபடுங்கள்.

மூன்று விதங்களில் அன்னை மஹா வராஹியின் அருளை பெறலாம்.

1.தினமும் இரவில் வாராகி மாலை ஜெபம் செய்து வருவது(25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்)

2.தினமும் இரவில் பின்வரும் மந்திரத்தை 1008 முறை அல்லது 108 முறை எழுதி வரலாம்.

ஓம் ஐம் க்லெளம் சிவ பஞ்சமி நமஹ (இது 15 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு பொருந்தும்)

3.பின்வரும் அன்னை மஹா வாராகி யின் 12 பெயர்களை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஜெபம் செய்து வரலாம்.

பஞ்சமி, தண்டனாதா,சங்கேதா, சமேஸ்வரி,சமய சங்கேதா,வாராகி, போத்ரினி,சிவை,வார்த்தாளி,மஹா சேனா,ஆக்ஞா சக்ரீஸ்வரி, அரிக்னி

(இது 15 வயது முதல் 100 வயது வரை அனைவருக்கும் பொருந்தும்)

இங்கே தரப்பட்டிருக்கும் அன்னை மஹா வாராகி படத்தை பிரிண்ட் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கொள்ளவும்.கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி வைத்து ஜெபம் செய்ய ஆரம்பி யுங்கள்!!!

நீங்கள் இன்று வரையிலும் மாந்திரீக பாதிப்பினால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா?

உங்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் அல்லது மண்டை ஓடு அல்லது இழிவான பொருட்கள் வருகிறதா?

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலம் தவிர மற்ற காலங்களிலும் சிறிது கூட வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா?

நீங்கள் மாந்திரீக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தான் உண்டு,தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தும் கூட உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தொழில்போட்டியாளர்கள் மறைமுகமாக உங்கள் வேலை/தொழிலில் பாதிப்பை உண்டாக்கி கொண்டே இருக்கிறார்கள் என்று நம்புகிரீர்களா?

இதில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ விரும்பும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்!!!

இந்த மாத தேய்பிறை பஞ்சமி 30.5.2021 ஞாயிற்று கிழமை இரவு உள்ளது. இந்த நாளில் இருந்து தினமும் வாராகி மாலை இரவில் தூங்குவதற்கு முன்பாக மூன்று முறை அல்லது ஐந்து முறை ஜெபம் செய்து வாருங்கள்!

அடுத்த 90 நாட்கள் வரை தினமும் இவ்வாறு ஜெபம் செய்து வாருங்கள்!(இந்த நாட்கள் முழுவதும் நீங்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது; மது அருந்தக் கூடாது;இந்த மாதிரி வாராகி ஜெபம் செய்ய ஆரம்பித்து உள்ளேன் என்று எல்லோரிடமும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்)

நம் ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான கர்ம வினைகள உண்டு.பராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாமய கர்மா!

இந்த மூன்று கர்ம விணைகளையும் ஒரே பிறவியில் நீக்க யாராலும் முடியாது.

அப்படி ஒரே ஒரு பிறவியில் நீக்க முயன்றால் பின்வரும் ஆன்மீக முயற்சிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தொடர்ந்து செய்து வர வேண்டும்.

1.ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாமல் செல்வதால் அண்ணாமலையார் அப்பாவின் கருணைக்கு பாத்திரம் ஆகி,இந்த மூன்று கர்மாக்கள் முழுமையாக நீங்குவதற்கு உரிய வழிமுறை கிடைக்கும்.

2.தினமும் இரவில் ஐந்து முறை வாராகி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை இவ்வாறு அன்னை வராகியை சரன் அடைந்து அவளை பெற்ற அன்னையாக எண்ணத் துவங்கினால் அவளது கருணையால் மூன்று கர்ம வினைகளும் ஒரே பிறவியில் அழிந்து விட வாய்ப்பு கிடைக்கும்.தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹா வாராகி! என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

பின்வரும் ஊர்களில்

(தமிழ்நாடு முழுவதும்) உள்ள வராகி அம்மன் ஆலயங்கள் உள்ளன.

இந்த ஊர்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் வசித்து வந்தால் தினமும் அல்லது புதன் கிழமை தோறும் அல்லது தேய்பிறை பஞ்சமி நாட்கள் வரும் போது வாராகி அம்மன் சன்னதிக்கு அருகில் அமர்ந்து கொண்டு வாராகி மாலை ஜெபம் செய்து வரலாம்.

காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராஹி தேவி அருள்பாலிக்கிறாள்.வராஹி அம்மனின் எதிரில் ”சந்தானஸ்தம்பம்” உள்ளது.

இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது தெய்வ வாக்கு.

பள்ளூர் அரசாலைஅம்மன் என்னும் வராஹி அம்மன் பெரும் வரம் தந்தருளுபவள்.

காஞ்சிபுரம் நகரில் இருந்து (அரக்கோணம் செல்லும் சாலையில்) 15 கிலோமீட்டர்

தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன்[வராஹி அம்மன்]திருக்கோயில் உள்ளது.

இங்கு வராஹி அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்தநிலையில் அருள்கிறாள்.மிகவும்

புராதனமான திருக்கோயில் இதுவாகும்.

பெரும்பாலான அம்மன் கோயில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்.அபூர்வமாக சில அம்மன் கோயில்கள் மற்றும் தெற்கு நோக்கி அமைக்கப் பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் பரிகார கோயில்கள் ஆகும். இங்குசெய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.

பள்ளூரில் வராஹி அம்மனை செவ்வாய் ,பஞ்சமி,அஷ்டமி ,அமாவாசை பௌர்ணமி நாட்களில் வந்து அபிசேகம் செய்வித்து,

வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேற்றி வருகின்றாள்.

பில்லி,

செய்வினை,

மன நோய்,

மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள்,

தீராத எதிரி தொல்லை,

முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை ,

வழக்குகள்,

காரிய தடைகள் அண்டாது என்கிறார்கள்.

பள்ளூரில் வராஹி அம்மன் திருக்கோயில் அருகில் மிகவும் பழமையான பரசுராமஈஸ்வரர் திருக்கோயில்,ஸ்ரீகுகையீஸ்வரர் திருக்கோயில்,சப்த கன்னிகைகள் திருக்கோயில் உள்ளது.’

இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு உரிய

தீர்த்தமாகும்.

நம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயில் ”தீர்த்தவாரி”இந்த ”சீதப் புனல்” என்னும் சீதளா தீர்த்தத்தில்தான் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்ல இந்த உத்தரகோசமங்கை மகா வராஹி அம்மன் [ஆதி வராஹி]சுயமபுவாக தோன்றி

ஆதிகாலத்தில் இருந்தே அருள்பாலித்துவருகிறாள் என்பது

குறிப்பிடத்தக்கது.இந்த சுயம்பு வராஹி அம்மன் தோன்றி சுமார் 25,000 ஆண்டுகள் ஆகின்றன!!!

வராஹி அம்மன் அபிஷேகத்துக்கும் சீதளா தீர்த்த நீர் பயன்படுவது அதன் மகிமையை காட்டுகிறது.இதனைத்தான் மாணிக்கவாசகர் தமது

திருவெம்பாவையில் பதிவு செய்து உள்ளார்.இந்த சுயம்பு வராஹி அம்மனை ஆதி வராஹி என்றே போற்றுகிறார்கள்.மங்க ள மாகாளி அம்மன் என்பதும் இவளை அழைக்கும் திருநாமத்தில் ஒன்று.

இதுபோல வேலூர்

அருகில் உள்ள கீழ்மின்னல் இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயில் அருகமைந்த வராஹி அம்மன் திருக்கோயிலும் பழமையானது என்கிறார்கள்.

இந்த இரத்னகிரி பாலமுருகன் திருக்கோயிலில் தான் ”வாழும் மகான் ;வாய் திறவா மகான்”முருகன் அருளால் பக்தர்களின் குறைகளை களைந்துவரும் ”தவத்திரு பாலமுருகன் அடிமை ஸ்வாமிகள்”அருளாசி வழங்கிவருகிறார் என்பது

குறிப்பிடத்தக்கது..இத்தல வராஹி அம்மன் பாலமுருகனடிமை ஸ்வாமிகளின் வழிபடு தெய்வம் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்கபட்டினம் திருவேட்டீஸ்வரி உடனுறை அரசேஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது.இத்தல தெற்கு நோக்கிய திருவேட்டீஸ்வரி அம்பாள் கருவறை கோஷ்டத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் பைரவரின் பார்வையில் வராஹி அம்மன்

அருள்பாலிப்பது சிறப்பு.

சிவகங்கை அருகில் உள்ள சிங்கம்புணரி முத்தவடுகநாத சித்தர் வராஹி அம்மனிடம் சித்தி பெற்றவர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவடுகநாதர் வராஹி அம்மனைப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார்.

அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தார்.எந்தவித விஷக்கடியாக இருந்தாலும் இவர் மந்தரித்துத் திருநீறு இட்டால் விஷம் இறங்கிவிடுமாம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவரிடம் திருநீறு பெற்றுக் குழந்தை பாக்கியம் அடைந்ததாக கூறுகிறார்கள்.

முத்துவடுகநாத

சித்தர் தமது சமாதி நாளை முன்னதாகவே அன்பர்களிடம் சொல்லி தம் சமாதியும் தோண்டச் செய்து,சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய தமது உருவக் கற்சிலை ஒன்றைச் செய்வித்து,அதற்கு உயிரூட்டி உருவேற்றி அன்பர்களிடம்

கொடுத்தாராம்.அவர் கூறிய நாளில் பின்னாளில் சமாதி ஆன உடன் அவருக்கு சமாதி செய்து,அதன் மேல்புறத்தில் சித்தர் உயிரூட்டி உருவேற்றி கொடுத்த அவரது சிலை பிரதிஷட்டை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு இடப்புறம் அவர் பூஜித்து வந்த வராஹி அம்மன் சிலையையும் பிரதிஷ்டை செய்து உள்ளனர்.

சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்து காத்து நிற்கிறார்.இவரை ”வராஹி சித்தர்”என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள். பல வருடங்களாக தீராத பில்லி, ஏவல், சூனியம், ஜின், மாந்திரீக பிரச்சனைகள் தீர பௌர்ணமி அன்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அடுத்துவரும் கொட்டாரம் எனும் ஊரிலிருந்து தெற்கில் 2 கிமீ தூரத்தில் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருத்தலத்தில் முத்தாரம்மனை அனுதினமும் சப்தகன்னியர்கள் வழிபடுகிறார்கள்.சக்தியின் அம்சமான பிராம்மி,மகேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வராகி,இந்திராணி,சாமுண்டி ஆகிய சப்தகன்னியரும் மது கைடப வதம்,சும்ப நிசும்ப வதம்,சண்ட முண்டர் வதம்,மகிஷாசூர வதம் முதலியவற்றில் அசுரர்களை ஒழிக்க அம்பாளுக்கு துணைநின்றவர்கள் ஆவர்.

இதனால்தான் இத்தலத்தில் பஞ்சமி நாட்களிலும்,நவராத்திரி ஒன்பது நாட்களிலும்,இராகுகால வேளைகளிலும் வழிபடுவது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

காசியில் வராஹி அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.தினமும் அதிகாலை 4.30 முதல் சூரிய உதயம் வரை மட்டுமே திறந்து இருக்கும்.இந்த அன்னைக்கு பாதாள வாராகி என்று பெயர்.காசி விஸ்வநாதர் கோயில் பகுதிக்கு செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள தெரு வழியாக சென்றால் கங்கை கரையோரம் ஒரு சிறு தெருவுக்கு உள்ளே அமைந்துள்ளது.

தஞ்சாவூர்

பெரிய கோயிலிலும் ,செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் ஆலயத்திலும்,

செங்கல்பட்டு அருகில் உள்ள

வாலாஜாபாத் ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருமலை சேரி என்ற கிராமத்தில் பழமையான சிவாலயத்தில் முன் பக்கத்தில் அன்னை மஹா வாராகி சன்னதி உள்ளது.இங்கே தேரையர் சித்தரின் ஜீவ சமாதி ஆகி உள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனிச்சன்னதியில் தனிக்கோயில்கள் உள்ளது சிறப்பு.

கடலூர் அருகில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் தலத்தில் செல்லியம்மன் ஆலயம் உள்ளது.இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகில் (மயிலா டுதுறை யிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவிலும்) உள்ள வழுவூர் இளமுலை நாயகி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் ஈசனை வராஹி அம்மன் அனுதினமும் வழிபடுகிறாள் என்கிறார்கள்.இங்கே தான் அன்னை மஹா வாராகி தெய்வீக வல்லமையை அடைந்தாள்!!!

பண்ருட்டியில் உள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலிலும் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இருந்து இராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் டி.குண்ணத்தூர் அருகில் உள்ள மகாசக்தி மாரியம்மன் திருக்கோயிலிலும் மஹாவராஹி அம்மன் எழுந்தருளி

அருள்பாலிக்கிறாள்.

சென்னை அருகில் உள்ள சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா திருக்கோயிலிலும் வராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்கிறாள்.

காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் உள்ள பிரத்யங்கரா

ஆலயத்திலும் தனி சன்னதியில் அருள் சக்திஉடன் அன்னை வராஹி அருள்பாலிக்கிறாள்.

திருச்சி அருகில் திருநெடுங்களம் மங்களாம்பிகை உடனுறை

நித்திய சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வராஹி அம்மன் வரம் பற்பல அளித்து தம்மை அடியவர்களை காத்தருளுபவள்.

நெல்லை கல்லிடைக்குறிச்சி திருவாடுதுறை கிளை மடம் அருகே உள்ள தளச்சேரி என்னும் இடத்தில் உள்ள மானேந்தியப்பர் திருக்கோயிலில் அருளும் வராஹி அம்மனும் தனித்துவம் மிக்கவள்.(மந்திர வராஹி)

விழுப்புரம் சாலமேடு எஸ்.ஆர்.நகரில் அஷ்டவராகி கோயில் உள்ளது.

இங்கு மகா வராகி, ஆதி

வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி,மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி முதலிய அஷ்ட வராகிகளும் உள்ளது சிறப்பு.

திருச்சி உறையூர் மங்கள் நகரில் வராஹி அம்மனுக்கு உள்ள தனி

ஆலயமும் சிறப்புகள் வாய்ந்தது.

தூத்துக்குடி எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் [ நரிப்பட்டி ]என்ற தலத்திலும் வாரஹி அம்மன் ஆலயம் உள்ளது.’

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை.ஸ்ரீ சக்ர மகாமேருவில்

வீற்றிருந்துஉலகை பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக பிராமி,கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி,வராஹி

எனும் சப்தமாதாக்கள் உள்ளனர்.

இவர்களில் வராஹி அம்மன் சிறந்த வரப்பிரசாதி.சப்த மாதர்கள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள்.

மனிதஉடலும், பன்றி முகமும் கொண்டவள்.கோபத்தின் உச்சம் தொடுபவள்.ஆனால் அன்பிலே,ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகிஅம்மன்.இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும்.சப்த மாதர்களில் வராஹியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

பைரவரின் சக்தியாக இருப்பதால்,வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள்

உருவாகும்.இதனால்தான் ”வராஹி காரனிடம் வாதாடாதே”என்பார்கள்.வாக் சக்தி அருளும் அதிதேவதை வராஹி அம்மன்.

பகை,வறுமை,பிணி,தடைகள் அகலும்.பில்லி,சூன்யம்,மாந்திரீகம் விலகி ஓடும்.எதிரிகள்

,பகைவர்கள் ,தீயோர் விலகிடுவர்.நம் மனதுக்கு பிடித்தவர்

வசியமாவர்.

பஞ்சமி நாட்களில் கூடியவரை இரவு உணவை தவிர்க்கவும்.தவிர்க்க இயலாதவர்கள் பால்,பழம் வராஹி

பூஜைக்கு பின்பு சுவைத்திடலாம்.இந்த 8 பஞ்சமி நாட்கள் [வளர்பிறை,தேய்பிறை பஞ்சமி ]தொடர் வழிபாட்டின்போது கண்டிப்பாக அசைவ உணவை தவிர்த்திட வேண்டும்.மது,புகை விலக்கிவைப்பது

சிறப்பு.

வராஹி அம்மனை பஞ்சமி நாட்களில் மட்டுமல்ல இந்த தொடர் பஞ்சமி நாட்கள் வழிபாட்டின் போதும்,தினமும் இரவில் தீபம் ஏற்றி வீடுகளில் அல்லது

அருகில் உள்ள அம்பிகை சன்னதியில் ”அபிராமி அந்தாதி”, ”லலிதா நவரத்தின மாலை”மற்றும் ”வராஹி மாலை”கண்டிப்பாக பாராயணம் செய்து வருதல் உடனடி

நற்பலன்களை அள்ளித்தரும்.

உங்கள் பிரச்சனைகளின் அதிதீவிரத்தை வாராஹியிடம் முறையிட்டால்,உங்கள் பக்தியின் தீவிரத்தை அறிந்து அன்னை வராஹி உங்கள்

பிரச்சனைக்கு கனவில் வந்து அல்லது உங்கள் முன் தோன்றி கூட உங்கள் பிரச்சனைகளின் தன்மையை உணர்த்தி ,அது உடனே நிவர்த்தியாக வழிவகை

செய்திடுவாள்.

கருப்பு உளுந்து கொண்டு சாதம் செய்து பஞ்சமி நாட்களின் இரவில் வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து முறைப்படி வழிபட வராஹி

அன்னையிடம் நாம் வைக்கும் நலம் வாய்ந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேறி வரும் என்கிறார்கள்.

வராஹி வழிபாட்டின் தொடக்கத்திலும்,நிறைவிலும்

கண்டிப்பாக ”பைரவர் பூஜை”செய்திடல் சிறப்பு.[பைரவரை நினைத்து வழிபடுதல் அல்லது பைரவர் சந்நதியில் தீபம் ஏற்றுதல் அல்லது பைரவர் பாடல்கள் பாராயணம் செய்து வருதல் சிறப்பு].

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனும் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வராகிஅம்மன் திருக்கோலமே பூணுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை பாலகுஜாம்பாள் உடனுறை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சன்னதி பின்புறம் அன்னை வராகி உடன் சப்த கன்னியர் உருவங்கள் உள்ளன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் உண்ணாமுலையம்மன் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னை வராஹி வழிபாடு செய்வது சிறப்பாம்.

அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு முன் படி ஏறும் பகுதியில் வராஹி அம்மன் காட்சி தருகிறாள்;இவளை வணங்கியப் பின்னரே மூலவர் ஆலந்துறையாரை வணங்க வேண்டும்;

திரும்பும் போது கவுமாரியை வணங்க வேண்டும்;இவ்வாலயத்தில் சப்தமாதர்களின் ஆலயம் இருக்கிறது.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் சப்தகன்னியரில் வராஹி அம்மன் சிறப்பாக போற்றப்படுகிறாள்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் அருகில் உள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் சந்நதி அருகில் வீரபத்திரர் உடன் சப்தகன்னிகளும் உள்ளனர்.இங்கும் வராஹி அம்மன் வழிபாடு செய்வது பெரும்சிறப்பு.

இங்கு சப்தகன்னிகள் வழிபட்ட பின்பு கண்டிப்பாக சுசீந்திரம் தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் வழிபாடு செய்திடல் சிறப்பாம்.

சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்து இருப்பது செங்கண்மால் திருத்தலம்.இங்கு பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரர் திருகோயில் அமைந்து உள்ளது.இக் கோவிலுக்கு வடக்கில் ”சுவேத வராக தீர்த்தம்” உள்ளதாம்.இதில் நீராடி,ஆலயத்தில் பெரியநாயகி உடனுறை செங்கண்மாலீஸ்வரரை வழிபடுவது வராஹி அம்மனை மகிழ்விக்குமாம்.

சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்தில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது.

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெற்கு மாடவீதியில் அமைந்து உள்ள காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளிஈஸ்வரர் திருக்கோயில் உட்ப்ரகாரத்தில் வராஹி அம்மனுக்கு தனி சந்நதி உள்ளது.

சென்னை மைலாப்பூர் கோலவிழி பத்திரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில்களிலும் சபதகன்னியர் சன்னதிகளில் ஒருவராக வராஹி அம்மன் எழுந்தருளியுள்ளாள்.

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை.எனவே பஞ்சமி நாட்களில் அன்னைக்கு பச்சை ஆடை உடுத்துவதும்,பச்சை மரிக்கொழுந்து சாற்றுவதும் சிறப்பு.

சிகப்பு நிற ஆடையும்,மலர்களும் கூட மிகவும் உகந்தவையே.வராஹி அம்மன் பூஜை செய்பவர்கள் பச்சை ஆடை,சிகப்பு ஆடை

உடுத்திக் கொள்வது ரெட்டிப்பு பலன்களை அள்ளித்தரும்.

…..”வராகி அம்மன்

மாலை”யும்,”அபிராமி அந்தாதி”யும் பாராயணம் செய்து அந்த பின்னிரவில்

வராகி அம்மனை வழிபடுங்கள்.

மூன்று விதங்களில் அன்னை மஹா வராஹியின் அருளை பெறலாம்.

1.தினமும் இரவில் வாராகி மாலை ஜெபம் செய்து வருவது(25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்)

2.தினமும் இரவில் பின்வரும் மந்திரத்தை 1008 முறை அல்லது 108 முறை எழுதி வரலாம்.

ஓம் ஐம் க்லெளம் சிவ பஞ்சமி நமஹ (இது 15 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு பொருந்தும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews