இன்று முதல் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்: ஆனால் ஒரு நிபந்தனை

இன்று முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் ஒரு சில வகுப்புகளுக்கு திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி போடப்பட்ட கல்லூரி மாணவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா விதிமுறைகளை மாணவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment