காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்கு ஜாக்பாட் : முதல்வர் அதிரடி !!

ஆண்டு தோறும் காதுகேளாதோருக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பிரேசிலில் 24-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற மே மாதம் 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சமீஹா பர்வீன்(நீளம் தாண்டுதல்), ஆர்.சினேகா(நீச்சல்), ஜெர்லின் அனிகா(இறகுப்பந்து தனிநபர்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(நீளம் தாண்டுதல்) ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்), பிரித்வி சேகர்(டென்னிஸ் தனிநபர்) ஆகிய வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

இதனிடையே கடந்த 22- தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் பிரேசிலுக்கு செல்வதற்க்கு தமிழக அரசு மூலம் விமானக் கட்டணம் மற்றும் உதவிகள் செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கொண்ட முதல்வர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அணைவருக்கும் தலா ரூ.30ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் தமிழகம் திரும்பும் போது அவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment