
செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கவலைக்கிடம் !!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பல காலமாக நீண்ட நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக அவர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இவரை மீட்பது சாத்தியமில்லாதது மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் பிராத்தனை செய்யுமாறு அவரது குடும்பத்துனர் கூறியுள்ளனர்.
மேலும், இவரது உடல்நிலை மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்ப பல கட்சி தலைவர்கள் பிராத்தனை செய்வது குறிப்பிடத்தக்கது.
Message from Family:
He is not on the ventilator. Has been hospitalized for the last 3 weeks due to a complication of his ailment (Amyloidosis). Going through a difficult stage where recovery is not possible and organs are malfunctioning. Pray for ease in his daily living. pic.twitter.com/xuFIdhFOnc
— Pervez Musharraf (@P_Musharraf) June 10, 2022
