தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி-19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அதனை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல தேர்தல் பறக்கும் படை அலுவலர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் அருகே அவ்வழியாக வந்த கார், வேன்களில் தேர்தலுக்கு பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்று சோதனை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தியதில் காரில் வந்த ரவிச்சந்திரன் என்பவர் ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 500 வைத்திருந்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்ட போது எந்த ஆவணங்களும் ரவிச் சந்திரனிடம் இல்லை கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.