News
துப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு! மூன்று நாளாக மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்;
தற்போது தமிழருக்கே அதிகம் பிரச்சனையாக காணப்படுவது தொடர்ந்து மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது தான். மேலும் அவ்வப்போது கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பல நேரங்களில் மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் இலங்கை கடற்படை அதிகம் நிகழ்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதார மட்டுமின்றி அவர்களின் உயிரும் கேள்விக்குறியாக காணப்படுகிறது. மேலும் நம் தமிழகத்தில் அவ்வப்போது வெளியிடுகின்ற அறிக்கையும் மீனவர்களை பல்வேறு விதங்களில் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
மேலும் பல நேரங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக காணப்படுகிறது.வருடத்தில் 365 நாட்களில் 100 நாட்களுக்கும் குறைவாகவே தான் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றன. அவ்வப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மாதிரி இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பது அவர்களுக்கு பெரும் சோகத்தை உருவாக்குகிறது. மேலும் இச்சம்பவம் தனுஷ்கோடி அருகே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை விரட்டியடித்தது மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பாம்பன் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
