கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் திரைப்பட பிரபலங்கள் மரணம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் கோபியில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவர் சோலையம்மா, தாய்மனசு போன்ற படங்களையும், 1000-க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் உடல்நல குறைவால் சில தினங்களாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.