ஈரோடு இடைத்தேர்தல்: உதயநிதியின் 2 நாள் பிரசாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், கருணாநிதி குடும்பத்தின் இளம் வாரிசும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு குமலன் குட்டை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி முருகேசன் நகர் வழியாக கணபதி நகர் செல்கிறார். அங்கு பொதுமக்களிடம் பேசும் உதயநிதி, பின்னர் அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு, நாராயணவலசு, இடையன்காட்டுவலசு வழியாக முனிசிபல் காலனிக்கு வருகிறார்.

பின்னர் கருணாநிதி சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். அதன்பின், பழனிமலை ரோடு, கமலா நகர், பம்பிங் ஸ்டேஷன் ரோடு, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், பி.பி.அக்ரஹாரம் வழியாக சென்று காந்திநகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 2வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்பின், ஈரோடு எஸ்கேசி ரோடு, கீரமடை, சந்தல்மேடு, ஆலமரத்து தெரு, மரப்பாலம், மண்டபம் ரோடு, காமத்தை காட்டு அய்யனார் கோவில் ரோடு, இந்திராநகர் வழியாக, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

10ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் திருத்தம்!

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.