சூப்பர் சிங்கரிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நபர்...
கனிமொழி சூப்பர் சிங்கர் 8ல் இருந்து வெளியேறியுள்ளார்.
Mon, 15 Mar 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் தற்போது 8வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சென்ற வாரம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் கனிமொழி மற்றும் சுதாகர் என இரு போட்டியாளர்கள் நடுவர்கள் முடிவின்படி நாமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வாரம் அந்த முடிவை தொகுப்பாளர் மா கா பா அறிவித்தார். இதில் குறைந்த வாக்குகள் பெற்று போட்டியாளர் கனிமொழி சூப்பர் சிங்கர் 8ல் இருந்து வெளியேறியுள்ளார். நிகழ்ச்சியில் அவருக்காக சிலர் கண்கலங்கினாலும், அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர்.