பின்வாங்கிய ரஜினியால் போராட்டம் நடத்தும் ரசிகர்கள்: முடிவில் மாற்றம் வருமா?

அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பின்வாங்கி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிப்பேன் என்றும் கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் தனது ஆன்மீக அரசியல் கட்சி போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக ரஜினியின் ரசிகர்கள் களப் பணியாற்றி வந்தனர். பூத் கமிட்டி உள்பட அனைத்து பணிகளும் முடிந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க தயார் நிலையில் இருக்கும் போது திடீரென தற்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்றும் ’தலைவா வா வா’ என்று கோஷமிட்டும் ரஜினியின் வீட்டின் முன் சற்று முன்னர் ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று ரஜினி தனது உடல்நிலை குறித்த நிலவரத்தை கூறியும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்துவது உண்மையான ரசிகர்களாக இருக்கமாட்டார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன