தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.
இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினி, கமல் போன்றவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதே சமயம் தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இத்ததைய தகவல் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி உள்ளது. இந்த சூழலில் இவர்களது குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே குழந்தைகள் இரண்டும் குறைமாதத்தில் பிறந்ததால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.