அண்ணாமலையை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் அறை, வாகனங்கள் மற்றும் அவர் உடுப்பி வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள், அவர் தரப்பில் எந்தவிதமான நடத்தை விதி மீறல்களும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலை திங்கள்கிழமை காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தடைந்தார்.

ஹெலிகாப்டர் மற்றும் அவர் எடுத்துச் சென்ற பையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், மாதிரி நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஹோட்டலை விட்டு வெளியேறி, காப் தொகுதிக்கு செல்வதாக அறிவித்த பிறகு, எஸ்எஸ்டி குழுவினர் உத்யாவர் சோதனைச் சாவடியில் மீண்டும் சோதனை நடத்தினர்.

மதியம் 2 மணியளவில் கடையாலி அருகே உள்ள ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு அண்ணாமலை வந்தடைந்தார், ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணம் – ராமநாதபுரத்திற்கு வருகை

உடுப்பியில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் பெரும் தொகையை கொண்டு வந்ததாக காப் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியதை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது .

மேலும் மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.