தமிழக சட்டசபையில் முன்னாள் சபாநாயகரும், திமுகவின் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றியவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நல குறைவால் இன்று காலமானார்..
இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 3 மாத காலமாக தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவர் தமிழகத்தில் 1991 முதல் 1996 வரை சபாநாயகராக இருந்தார். குறிப்பாக சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் சேடப்பட்டி முத்தையா என்று அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.