ஆரம்பித்து விட்டதா கோடை? வறண்ட வானிலையே நிலவும்; 13ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மழை!

நம் தமிழகத்தில் கோடை காலம் மெல்லமெல்ல தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 13ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment