தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்எம்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 10 முதல் 11 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என தெரெய்வித்துள்ளது.
மார்ச் 12 முதல் 14 வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும் : ஜேபி நட்டா
மேலும், மார்ச் 10 முதல் 11 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.