சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சீரியல் நடிகை திவ்யா. இவருக்கும் சீரியல் நடிகர் அர்ணவ்-க்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் தன்னுடைய கரு எப்போ வேணாலும் கலையலாம் என சோசியல் மீடியாவில் நடிகை திவ்யா வீடியோ ஒன்றை வெளியீட்டார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியது. தற்போது மனைவி திவ்யா மீது நடிகர் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் திவ்யாவை தாக்கியதாக வீடியோவில் கூறப்பட்டது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார்.
அதோடு வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும், நடிகர் அர்ணவ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கருவை கலைப்பதற்காக திவ்யா நாடகம் ஆடுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் திவ்யா புகார் தெரிவித்திருப்பதாக