என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்!

6b42fa067d32b096ae1e3231646ef64d

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்னை அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான ரசிகப்‌ பெருமக்களுக்கு…

நான்‌ அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர்‌, ரஜினி மக்கள்‌ மன்ற பதவி பொறுப்பிலிருந்தும்‌, மன்றத்துலிருந்தும்‌ நீக்கப்பட்ட பலருடன்‌ சேர்ந்து, சென்னையில்‌ ஓர்‌ நிகழ்ச்சியை நடத்துயிருக்கிறார்கள்‌. கட்டுப்பாட்டுடனும்‌, கண்ணியத்துடனும்‌ நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள்‌. இருந்தாலும்‌ தலைமையின்‌ உத்தரவையும்‌ மீறி நடத்‌தியது வேதனையளிக்கிறது. தலைமையின்‌ வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொள்ளாத மக்கள்‌ மன்றத்‌தினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

35571febdb4c5265d611dac87c013c3b

நான்‌ ஏன்‌ இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்‌. நான்‌ என்‌ முடிவை கூறிவிட்டேன்‌. தயவு கூர்ந்து இதற்கு பிறகும்‌ நான்‌ அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும்‌ இது போன்ற நிகழ்வுகளை நடத்‌தி என்னை மேலும்‌ மேலும்‌ வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்‌ என்று பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்‌!!!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.