பாஸ்போர்ட் மோசடி வழக்கில் டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர்-உயர்நீதிமன்ற மதுரை கிளை;

தினம்தோறும் உயர்நீதிமன்றத்தில் இருந்து சில முக்கியமான தீர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில் டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துள்ளது. பாஸ்போர்ட் மோசடி நிகழ்ந்த காலத்தில் மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் குற்றம் அற்றவர் என்று நீதிபதி கூறினார்.

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்பு என்றும் கூறினார். மேலும் அண்ணாமலை பற்றியும் நீதிபதி கருத்தினை கூறினார். பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் கூறினார்.

அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்; அவர் இல்லை எனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்றும் கூறினார். தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட கோரிய சுரேஷ்குமார் என்பவரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். நசுருதீன் என்பவர் பயண முகவர் மட்டுமே அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பதால் பாஸ்போர்ட் புதுப்பித்து தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment