ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒரேநாளில் சூப்பர் மாடல் ஆகியுள்ள சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு பகுதியின் அருகே உள்ள கொடிவல்லி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்தான் மம்மிகா. இவர் வயல் வேலைகளுக்குத் தினசரி சென்றுவருகிறார். வயல் வேலைகள் மட்டுமல்லாது இவர் வீடு கட்டுமான வேலைகளையும் செய்து வருகிறார்.

மம்மிகா கொடிவல்லி கிராமத்தில் இளைஞர்களுடன் நன்கு பழகி நட்பு பாராட்டுபவராக இருந்து வந்துள்ளார்.

கொடிவல்லி பகுதியில் புகைப்படம் எடுக்கும் தொழில் பார்த்துவரும் ஷரிக். இவர் மம்மிகாவுடன் பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் மம்மிகா முறுக்கு மீசையுடன் ஹீரோபோல் இருப்பதைக் கண்டு அவரை வைத்து போட்டோஷுட் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இதை மம்மிகாவிடம் கூற போட்டோஷுட் எல்லாம் வேண்டாவே வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

ஆனால் ஷாரிக் விடாப் பிடியாய் மம்மிகாவிடம் தான் ஏற்கனவே எடுத்த பல புகைப்படங்களைக் காட்டி வற்புறுத்த மம்மிகா ஒரு மனதாக ஓகே சொல்லியுள்ளார்.

அதன்படி கோட் சூட் மாட்டி, ஹேர் ஸ்டைல் செய்து போட்டோஷுட் நடத்த மம்மிகா ஒரே நாளில் சூப்பர் மாடல் ஆகிவிட்டார்.

மம்மிகாவின் போட்டோஷுட் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews