சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.. வணிகர்கள் மகிழ்ச்சி.. பொதுமக்கள் அதிருப்தி..!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் சில மாதங்கள் சிலிண்டர் விலை உயர்வதாகவும் சில மாதங்கள் குறைவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் மே ஒன்றாம் தேதியான இன்று சிலிண்டர் விலை குறித்த மாற்றம் வெளியாகி உள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை  171 ரூபாய் குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2192.50 என விற்பனையாளர் நிலையில் தற்போது 171 குறைக்கப்பட்டு ரூ.2021.50  என விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் 1118. 50 ரூபாய் என விற்பனை ஆகி வரும் நிலையில் இந்த நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது அடுத்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டுமே குறைக்கப்பட்டு வருகிறது என்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு குறைக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தங்களது தெரிவித்து வருகின்றனர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை மற்றும் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த பொது மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை குறைத்தது போலவே வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையையும் குறைந்தபட்சம் 150 ரூபாய் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.