கடலூர் பட்டாசு ஆலை வெடிப்பு: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

கடலூரில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

அந்த அறிக்கையில், “கடலூர் மாவட்டம் மடாலப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்தில் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா (24) உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கடலூர் அரசு மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சுமதி, பிருந்தாதேவி, லட்சுமி, செவந்தி, அம்பிகா ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தரம்! குழந்தைகளிடம் கேட்ட உதயநிதி!

முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.