கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு மிகப் பெரிய அச்சத்தை கொடுத்தது கொரோனா வைரஸ். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவியது. இதன் விளைவாக கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்தது.
இந்த நிலையில் தற்போது இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 954 பேருக்கு புதிதாக இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி 267 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 23 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 20 ஆயிரத்து 506 பேர் குணமடைந்து வீடு திரும்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 707 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் நேற்றைய தினம் மட்டும் 80 லட்சத்து 98 ஆயிரத்து 716 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 124 கோடியே 10 லட்சத்து 86 ஆயிரத்து 850 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.