Entertainment
கஜா புயல் தொடர் நிவாரணபணிகளில் சூர்யா ரசிகர்கள்
நடிகர் சூர்யா தொடர்ந்து நிவாரணப்பணிகள், சமூகப்பணிகள், கல்விப்பணிகள் இல்லாத குழந்தைகளுக்கு உதவுவது என தொடர்ந்து செய்து வருகிறார். அவரை தொடர்ந்து கார்த்தியும் உழவர்களுக்கு உதவி வருகிறார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இன்னும் துயரத்தின் பிடியில்தான் உள்ளனர். இரண்டு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் பலருக்கு வீடில்லை, வாழ்வில்லை நிலைதான். ஆரம்பத்தில் நிறைய தொண்டு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள் நிறைய உதவிகளை செய்தனர்.
தற்போது துயரங்கள் குறைந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சூர்யா ரசிகர்கள் வெளியிட்டுள்ள டுவிட்
எத்தனை பேர் காஜா புயல் பத்தி இன்னும் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து 62 நாட்களாக வேளை பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்.3 நாட்கள் முன்பு கூட தஞ்சாவூர் மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம் & இரண்டு வீடு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
