
தமிழகம்
கரூர்: குளித்தலையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் கண்ணன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 19 வயதில் சன்மதி என்ற மகள் உள்ளதாக தெரிகிறது.
இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம். (சி.ஏ.) இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சன்மதி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவருடைய தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சன்மதி வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சன்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தாயார் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
