Entertainment
திருப்பதி கோவிலில் சமந்தா
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா திருப்பதி ஏழுமலையான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் விருப்பகடவுளான திருப்பதி இருக்கும் அக்கட பிரதேசமான ஆந்திர பிரதேசத்துக்கே திருமணமாகி சென்றார் சமந்தார்.

நாகார்ஜூன் மகனான நாக சைதன்யாவை மணமுடித்து ஆந்திரா மருமகளான சமந்தா அடிக்கொருமுறை தன் இஷ்டதெய்வமான ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஏழுமலையானை தரிசித்த சமந்தா தற்போது பாதயாத்திரையாக அலிபிரிமலைப்பாதை வழியாக நடந்தே சென்று ஏழுமலையானை தரிசித்தார்.
