Entertainment
லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய அபிராமி!!!
நேற்றைய நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கிற்காக இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு அணியில் லாஸ்லியா குவாலிட்டி செக்கராகவும், மற்றொரு அணியில் வனிதா குவாலிட்டி செக்கராகவும் நியமிக்கப்பட்டனர்.
வனிதா அணி அதிக தலையணைகள் செய்தபோதிலும், லாஸ்லியா அதனை நிராகரித்துவிட்டார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது.

அந்த டாஸ்க் முடிவில் 3 மந்திர பொம்மைகள் கொடுக்கப்பட்டது, அதை பாதுகாக்குமாறு பிக் பாஸ் கூற, பத்திரமாக வைத்திருந்தனர். அதன்பின்னர் அந்த பொம்மைகளை கன்ஃபெஷன் ரூமுக்குள் வைத்தனர்.
அந்த மந்திர பொம்மைகள் கொடுத்த 3 வரங்கள் வெளியே காத்திருக்கிறது என்று கூற, அதனை வெளியே சென்று ஆர்வமாகப் பார்த்தனர். அப்போது அபிராமி, ஷாக்சி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்தனர்.
உள்ளே வந்த அபிராமி லோஸ்லியாவிடம் பேசினர். லாஸ்லியாவிடம் பேசத் துவங்கிய அபிராமி, உனக்கு நான் தான் உதாரணம். இந்த மிகச் சிறந்த வாய்ப்பை நானும், ஷாக்சியும் இழந்துவிட்டோம், சென்டிமெண்ட் தான் நான் வெளியேறியதற்குக் காரணம். நீயும் அதே தவறினை செய்ய வேண்டாம் என்பதுபோலக் கூறினார். லாஸ்லியா அதற்கு சரி என்பதுபோல தலையாட்டினார்.
