அழகோ அழகு! பேரழகு!

நீ நடந்தால் நடையழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகுன்னு சினிமா நடிகனை பற்றி பாடக்கேட்டிருக்கோம். ஆனா, விஷ்ணுபகவானின் அவதாரங்கள் குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் எவை அழகுன்னு தெரியுமா?!

367898bc9beb9dff62d5ad4500a6a014

அரங்கனுக்கு நடையழகு-
ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை.

வரதனுக்கு குடையழகு- 
காஞ்சி வரதராஜரின் திருக்குடை.

அழகருக்குப் படையழகு-
கள்ளழகருடன் மதுரைக்கு வரும் படை.

மன்னாருக்கு தொடையழகு- 
ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னாருக்கு ஆண்டாள் சூடித்தரும் மாலை(தொடை- மாலை) அழகு.

அமுதனுக்கு கிடையழகு- 
குடந்தை ஆராவமுதனின் கிடை அதாவது பள்ளிகொண்ட திருக்கோலம் அழகு.

நாரணர்க்கு முடியழகு-
திருநாராயணபுரத்து செல்லப் பிள்ளையின் வைரமுடி சேவை அழகு.

திருமலையான் வடிவழகு- 
திருப்பதி வேங்கடவனின் தோற்றம் அழகு.

சாரதிக்கு உடையழகு-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் ரதசாரதி உடையலங்காரம் அழகு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.