தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-

நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்கினால் சிறப்பு.

4681ee31f3099eabfec5b4858cb6d998

இன்று முதல் ஸ்லோகம்

கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

இதனுடைய பொருள் என்ன என்று பார்ப்போம் இறைவனோடு கலந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை தெரிந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவள் நீ எல்லையற்ற மகிமை கொண்டவள் நீ மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக என்பதாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews