சபரிமலை கோவில் குறித்து ஒரு பார்வை!

17da1395b05b29ae77f24553b9b209e9

சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா‎ மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என அழைக்கப்படுகிறது

18 மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அந்த 18 மலைகளில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்திலும், மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ள இந்த சபரிமலையை சூழ்ந்து ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன.

நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தரும் சாதி, மத, இன, வேறுபாடுகளை ‎பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் ஒரே ‎மந்திரத்தை உட்கொண்டும் சுவாமி ‎ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ‎குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த கோவிலுக்கு 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ளதால் பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை என்று வழிவழியாக கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...