
தமிழகம்
காலரா முன்னெச்சரிக்கை: காரைக்காலில் 144 தடை உத்தரவு!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் சில பேருக்கு காலரா அறிகுறி தென்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நோய்த் தொற்று ஏற்படுவதால் மக்கள் அங்கு இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தூய்மையற்ற முறையில் இருப்பதால் காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் அப்பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.
இதனிடையே இன்று மாலை முதலில் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காலரா அறிகுறி தென்பட்டால் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உடனடியாக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
