ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய உளவு ட்ரோன் எதிர்காலத்தில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனா தனது எதிரி நாடுகளை கண்காணிக்க உளவு ட்ரோன் பயன்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட அமெரிக்காவை சுற்றி பறந்த உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய உளவு ட்ரோன் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பின் ஆவணங்களிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியே கசிந்த தகவல் படி சீனா தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு உளவு ட்ரோன் தயாரிக்க முடிவு எடுத்துள்ளது என்றும் அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் உளவு ட்ரோன் உருவாக்கவும் அதை எதிரி நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் உளவு ட்ரோன் ஒளியை விட மூன்று மட வேகத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஒளியின் வேகம் மணிக்கு 3 லட்சம் கிமீ என்ற நிலையில் அதிகமாக மூன்று மடங்கு என்றால் ஒன்பது லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் உளவு ட்ரோன் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனா மற்றும் தைவான் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியா மற்றும் சீனா இடையே அருணாச்சலப்பிரதேச விவகாரமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிரி நாடுகளை கண்காணிக்க சீனா உளவு ட்ரோன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவுத்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விளக்க படங்களும் அதில் உள்ளதாக கூறப்படுகிறது.