News
திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பிரச்சார தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அரசு எனவும் அவர் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசுதான் எனவும் அவர் கூறினார். அவர் அப்பகுதியில் வாகனத்தின் மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
