லோஸ்லியா கூட பேசக்கூடாது- கண்டிஷன் போட்ட சேரனின் மகள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

f88b80434348f11015c78280561f8a74-1

நேற்று காலை தர்சனின் தாயார் மற்றும் தங்கை வந்தனர், மதியம் வனிதாவின் இரு மகள்களும் உள்ளே வந்தனர். அடுத்து யார்? என்று எதிர்பார்த்திருக்க, “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” என்று இயக்குனர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் சேரனின் ஆட்டோகிராஃப் படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பாக, வருவது சேரன் குடும்பம் என்பது உறுதியாகியது.

சேரனின், தாயார், தங்கை மற்றும் இளைய மகள் தாமினி ஆகியோர் வந்தனர், சேரன் ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொண்டார். அதன்பின்னர் அனைவரிடமும் பேசினர்.

சேரனை தனியே அழைத்து பேசிய சேரன் மகள், “நீங்க புள்ளன்னு சொன்ன அப்போ உங்களை விட்டுக் கொடுத்துட்டு அது இங்க உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருந்தது. நீங்கள் தான் நம்பிக்கிட்டு இருக்கிறீங்க. அது தான் உங்க மைனஸ்.அந்த இரண்டு பேரிடம் பேசினால் நான் நான் பேச மாட்டேன் என்று கோபமாக கூறினார்.

சேரன் சிரித்தவாறே அனைத்தும் சரி ஆகிவிட்டது என்றார். பார்வையாளர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews