தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளிவந்து விடுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவர தொடங்கியுள்ளது
முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்