மக்களே உஷார்!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி‌ காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

குஷியோ குஷி!! தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை..!!!

அதே போல் குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.