ஆந்திர கடலோரப் பகுதிகளி நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.