தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.15,000 சம்பளம்.. தமிழக அரசில் வழக்கு பணியாளர் வேலை!
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் தற்போது காலியாக உள்ள வழக்கு பணியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
வழக்கு பணியாளர் – 05 காலியிடங்கள்
வயது வரம்பு :
வழக்கு பணியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 30
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
வழக்கு பணியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
வழக்கு பணியாளர் – 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 12.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
“பி” பிளாக், 4வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
வேலூர்-09.
