திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர், அரக்கோணம் திமுக எம்.பியுமான திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கடந்த 1995-ம் ஆண்டு, குரோம் லெதர் தொழிற்சாலையை வாங்கியது தொடர்பாக குவிந்தன் வாசன் என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.