ஏசி ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன ஆகும்?

ஏசி மற்றும் ஃபேன் ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடாது என்றே ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில் ஏசி குளிர்ந்த காற்றை வெளியேற்றும், ஃபேன் சூடான காற்றை வெளியேற்றும், எனவே ஏசியின் குளிர் தன்மை குறைந்து விடும் என்று கூறுவது உண்டு. ஆனால் ஏசி ஓடும்போது ஃபேன் ஓடினால் ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவலாகும் என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.

ஒரு அறையில் ஏசியும் ஒரே ஃபேனும் நேரத்தில் ஆன் செய்யப்படும் போது, அறை முழுவதும் ஏசியில் இருந்து வெளியேறும் குளிர்ந்த காற்றைப் பரப்புவதற்கு ஃபேன் உதவுகிறது. இது அறையை குளிர்ச்சியாக வைக்க உதவும். மேலும் ஃபேன் காற்றும் உங்கள் உடல் மீது இருக்கும் வியர்வையை ஆவியாக்க உதவுகிறது.

மேலும் ஏசியுடன் ஃபேன் இயக்குவது மின்சாரத்தை சேமிக்க உதவும். ஏனென்றால், அறை முழுவதும் குளிர்ந்த காற்று சீராக விநியோகிக்க ஃபேன் உதவும், அதாவது அறையை குளிர்விக்க ஏசி கடினமாக உழைக்க வேண்டியதில்லை. ஏசியை 24 அல்லது 26ல் வைத்திருந்தாலே போதும், இதனால் குறைந்த மின்சாரம் தேவைப்படும்.

மின்சாரத்தை சேமிக்க ஏசி மற்றும் ஃபேன் இரண்டையும் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.  ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று நம்மை நோக்கி வீசும் வகையில் ஃபேனை வைக்கவும். குறைந்த வேகத்தில் ஃபேனை வைத்தால்
போதும். ஆனால் கதவு, ஜன்னல் மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், குளிர்ச்சியாகவும் மின்சாரத்தை சேமிக்கவும் செய்யலாம்.

ஒரு அறையை குளிர்விக்க ஏசி மற்றும் ஃபேன்   எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது பற்றிய சில கூடுதல் விவரங்கள் இதோ:

* அறையில் உள்ள காற்றில் உள்ள வெப்பத்தை ஏசி நீக்குகிறது.

* மின்விசிறி குளிர்ந்த காற்றை அறை முழுவதும் பரப்புகிறது.

* ஏசி மற்றும் மின்விசிறியின் கலவையானது அறையின் வெப்பநிலையைக் குறைத்து அறை முழுவதும் குளிராக வைத்து இருக்க உதவுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.